யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!

Share

மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியில் யானை தாக்கிப் படுகாயமடைந்திருந்த குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சதனாந்தன் சுதா என்னும் 46 வயது பெண்ணே உயிரிழந்தார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டது. அதனால் வெளியே வந்த குடும்பத் தலைவர் டோ ச் லைட் அடித்து அவதானித்தார். இதன்போது அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்தார்.

அப்போது யானை ஒன்று அவர்களது காணிக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்தது. அதனால் கணவர் ஓடி வீட்டுக்குள் நுழைந்தபோதும் மனைவி ஓடி மறைவாக இருந்தார்.

இதன்போது வீட்டுக்கு வெளியே மறைவில் இருந்த பெண்ணை யானை தாக்கியது.

யானை தாக்கிப் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அறிக்கையிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...