2 40
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினருக்கான வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட சுமார் 25 – 30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் இந்த வீடுகள் முன்னுரிமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...