24 6622b1c42a216
இலங்கைசெய்திகள்

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

Share

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

கோடை என்றாலே முதலில் கொழுத்தும் வெயில் தான் நினையில் வரும். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

அதற்காக அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து வீ்ட்டில் இருந்தவாறே முக அழகை பாதுகாக்க பல வழிகள் உள்ளன.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வெயில் காலத்தில், முகத்தில் உள்ள கருமை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன.இவை இன்னும் ஏராளமான நன்மைகளையும் கொண்டுள்ளது.

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

அதேபோன்று முகம் பொலிவு பெற, பீட்ரூட் பானம், கற்றாழை பானம், நீர்மோர், கரட் பானம், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.இவை வெயில் காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கும்.

அதேபோன்று, வெயில் காலத்தில், மதியம் 12 முதல் 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்த நேரத்தில் தான் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில்,மேற்குறித்த இலகுவான வீட்டுக்குறிப்புக்களை பயன்படுத்தி உங்கள் முக அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...