monkey
அரசியல்இலங்கைசெய்திகள்

குரங்குகள் ஏற்றுமதி – காரணம் வெளியிட்டது அமைச்சு!!

Share

இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கோரிக்கையை அமுல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைக் கேட்க அமைச்சு  ஒரு கருத்துக்களத்தை தொடங்கியுள்ளது. சுற்றாடல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத்துறை அமைச்சு, மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த குரங்கு ஏற்றுமதி தொடர்பில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

“நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் சிறந்த யோசனைகள் கருத்துக்களை சேகரிப்பதைக் கொண்டு, குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சு தீர்மானம் மேற்கொள்ளும்“.

“குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் நாசம் செய்யப்படும் பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அப்புறப்படுத்த அமைச்சு எதிர்பார்த்திருக்கிறது. மாறாக காடுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் குரங்குகளை அப்புறப்படுத்துவது நோக்கமல்ல“ என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...