21 3 scaled
இலங்கைசெய்திகள்

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

Share

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

காலாவதியான மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”கலாவதியான மருந்துப் பொருட்களை வைத்தியசாலையில் பயன்படுத்துமாறு சுற்று நிருபங்கள் வெளியிடப்படவில்லை.

சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களினால் இலவச மருத்துவ சேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதன்படி மக்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் சேவையை பெற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

மேலும், கலாவதியான மருந்துப் பொருட்களை பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தல் வழங்கியதில்லை

காலாவதியாகி மருந்துப் பொருட்கள் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கலாவதியான மருந்து வகைகளை பயன்படுத்துமாறு கூறப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...