tamilnaadi 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம்

Share

இலங்கையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விகிதாசார முறைமையை மாற்றி தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்கள் நேரடி தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

ஏனைய 65 உறுப்பினர்கள் விகிதாசார, மாவட்ட அல்லது தேசிய ரீதியில் தெரிவு செய்யும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக கட்சித் தலைவர்களிடம் தேர்தல் முறை குறித்து கருத்து கோரப்பட்டதாகவும், அமைச்சரவை உப குழுவொன்றும் இந்த முறையை பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...