76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் தேர்தல்! – தயாராகுமாறு பஸில் பணிப்புரை

Share

” மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், அரசில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரத்துக்கு உரிய வகையில் பதிலடி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் இறுதி தருவாயில், மே மாதத்துக்கு பிறகு தேர்தல் ஒன்று இடம்பெறும். எனவே, அதற்கான ஏற்பாடுகள் பற்றி விழிப்பாகவே இருங்கள் என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் ஜுன் மாதம் உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...