18 4
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

Share

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இனிமேல் நடக்காது என்று இப்போது என்னால் உறுதியாக சொல்லவும் முடியாது.

இந்த பிரச்சினையை இராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்கத் தயாராக இருப்பதோடு அதற்கான முனைப்புகளிலேயே தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.

எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது இரு நாட்டு கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். நான் அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்” என்றார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...