image c763c9aec6
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தது டோனியர்-228

Share
இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரண்டு டோர்னியர்-228 ( Dornier 228 ) கடல்சார் உளவு விமானங்களில் முதலாவது விமானம் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. அத்துடன் விமானத்தை இலங்கை விமான படைக்கு கையளிக்க இந்திய கடற்படையின் உப தளதிபதி வைஸ் எட்மிரல் சதீஸ் என் கோர்மடே இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
2022 ஏப்ரலில் இந்தியாவிற்கு விமானப் பயிற்சிக்காக 15 பேர் கொண்ட குழுவினரை இலங்கை விமானப்படை அனுப்பியது, அவர்கள் பயிற்சியை முடித்து, விமானத்தை பறக்கவும் பராமரிக்கவும் தகுதி பெற்றுள்ளனர். இந்திய பொறியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற 15 இலங்கை விமானப்படை தரைக் குழுவினரால் விமானம் பராமரிக்கப்பட உள்ளது.
புதிய விமானத்தை இந்தியா தயாரிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் இந்த விமானம் இலவசமாக வழங்கப்படும் இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் தயாராகும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு இடைக்காலமாக இந்த விமானம் பயன்பாட்டிலிருக்கும்.
டோனியர் இலகு ரக உளவு விமானமானது குறுந்தூரத்தில் விண்ணுக்கு செலுத்தக்கூடிய மற்றும் தரையிறக்கக்கூடிய வசதி வாய்ப்புக்களை கொண்டுள்ளதோடு, இலத்திரணியல் யுத்த நடவடிக்கைகள் கடற்கண்காணிப்பு அனர்த்த நிலைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பயன்படுத்தக்கூடியது.

image cc480dd5f1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...