ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

Share

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 12– 19 வயதுக்குட்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கே தடுப்பூசிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆரோக்கிய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். அதனால்தான் இது குறித்து வைத்திய நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற விரைந்து செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

நிலைமைகளை ஆராய்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வைத்திய நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகள் முன்வைப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...