ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

Share

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 12– 19 வயதுக்குட்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கே தடுப்பூசிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆரோக்கிய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். அதனால்தான் இது குறித்து வைத்திய நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

ஆகவே ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற விரைந்து செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

நிலைமைகளை ஆராய்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து வைத்திய நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகள் முன்வைப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...