parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோப், கோபா குழுத் தலைவர் பதவி தொடர்பில் விவாதம்!

Share

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்குப் புறம்பாக கோப் மற்றும் கோபா குழுத் தலைவர் பதவிகளுக்கு எம்.பி.க்களை நியமிக்கும் முன்மொழிவு குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் நேற்று ஆட்சேபனைகள் எழுந்தன.

இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களின் பெயர்கள் தலைவர் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் திரு காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களால் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்புடைய இரண்டு குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவதாக சபாநாயகர் உறுதியளித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

அது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், அன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி செயற்படுமாறும் சபாநாயகரிடம் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...