1 36
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

Share

தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை

இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதால், தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக, அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார (P. Sathkumara ) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது திணைக்களம் குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்

பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...