ali subri
இலங்கைசெய்திகள்

இனங்காணப்படுவோரில் 98 சதவீதமானோருக்கு டெல்டா!

Share

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் என்பனவற்றால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் அரசின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசு ஒரு இக்கட்டான சூழலில் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சாதாரண விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய அரிசியை அதிக விலைக்கு விற்கின்றனர். அல்லது பதுக்கி வைக்கின்றனர். எனவே அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்படுதல் அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...