download 1 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பணத்துக்காக பட்டம்! – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Share

கல்வியியற் கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான அவசர அறிவித்தலொன்றை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலில்,

தற்போதைய நாட்டுச் சூழ்நிலையில் எல்லோரையுமே ஏமாற்றும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலைமை கல்வித் துறையிலும் நுழைந்துள்ளமை வேதனையான விடயம். அதிலும் கல்விக்குப் பேர்போன யாழ்ப்பாணத்தில் காசுக்காக பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.

குறிப்பாக இந்தப் பட்டங்களைப் பெற அதிபர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ஒட்டுமொத்த கல்விக்கும் சாவுமணி.

இதில் விசேடமாக கல்வியியற் கல்லூரி நிறைவுசெய்த ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நிறைவுசெய்த ஆசிரியர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றிதழ், பட்ட மேற்படிப்புச் சான்றிதழ்கள் ஏன் கலாநிதி சான்றிதழ்கள்கூட போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.

உயர்கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இதில் நிறுவனங்களின் கல்வியியலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சிபெற்ற பல அதிபர், ஆசிரியர்கள், அதிகாரிகள் அத்தகைய போலியான சான்றிதழ்களை தமது தொழில் மற்றும் கல்வித் தகைமைகளுக்காக திணைக்களங்களில் ஒப்படைத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது.

தயவுசெய்து அவற்றை உடனடியாக மீளப்பெற்றுக்கொள்வதோடு இனிவரும் காலங்களில் பணத்தைக்
கொடுத்து ஏமாறாமல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கூடாக வழங்கப்படும் பட்டங்களுக்காக முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டால் உங்கள் தொழிலுக்கும் ஆபத்தாகும் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...