tamilnaadi 88 scaled
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

Share

கடன் மறுசீரமைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

அமெரிக்க டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம், பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவர்களுடன் இரண்டு மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொலர் பத்திரக்காரர்களுடன் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இன்னும் இலங்கை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட 13 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பது குறித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை கூடிய விரைவில் முடிவுறுத்த வேண்டும் என்று தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து நிறைய ஆர்வம்

எனினும் செயல்முறை காரணமாக அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பியா மற்றும் பிற நாடுகளும் இன்னும் தங்கள் கடன்களை மறுகட்டமைப்பதில் தாமதத்துடன் போராடி வருகின்றன.

பீஜிங்கிற்கும் மற்ற கடன் வழங்குநர்களுக்கும் இடையே கடன் நிவாரணம் குறித்த கருத்து வேறுபாடுகளே இதற்கான காரணமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...