12
இலங்கைசெய்திகள்

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

Share

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.

மேலும், பாதாள உலகத்தையும்,போதைப் பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அமைச்சருக்கு பாதாள உலக கும்பல்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை பாதாள உலக அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படாது என அமைச்சர் திரான் அலஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...