ddd
இலங்கைசெய்திகள்

ஈழத்தின் பிரபல மிருதங்க கலைஞர் மறைவு!

Share

ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஒலிப்பதிவாகிய அதிகமான பாடல்கள் மற்றும் பெருமளவான பக்திப் பாடல்கள் ஆகியவற்றுக்கு அவரது அணி இசையமைத்துள்ளது.

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இசையரங்குகளையும் ஆலய விழாக்களையும் அலங்கரித்த கலைஞனாக சதா வேல்மாறன் விளங்குகிறார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமாவார்.

அவரின் திடீர் இழப்பு தொடர்பில் சக கலைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோர் இவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...