tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

Share

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வட்டித்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை இலங்கை மின்சார சபையே செலுத்தி வருகிறது. எனினும் குறித்த தொகையை மின்பட்டியலின் வெவ்வேறு கட்டணப் பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சார சபை அறவிட்டுக்கொள்வதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவல் வெளியில் கசிந்துள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் மீளப் பெறுவதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக செயற்படுத்துமாறு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...