tamilni 322 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

Share

இலங்கையின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், இளம் வயதினரின் (15-24 வயது) வேலையின்மை விகிதம் ஏனைய வயதினரையும் விட 25.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் வேலையின்மை விகிதம் 05 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...