3 41
இலங்கைசெய்திகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

Share

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறீதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலை அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில், இதனை தடுக்க தற்போது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி தனக்கு நீதி கோரி அவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அவரது அரசியல் நிலைநிறுத்தப்படும்.

கட்சி தன்னை புணர்நிர்மாணம் செய்வதற்கும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மக்கள் போராட்டம் மட்டும் தான் அல்லது சட்ட ரீதியாக அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...