கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் கூட்டம் இராப்பொழுதாகியும் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலி முகத்திடலில் இன்று காலை ஆரம்பமான தன்னெழுச்சி போராட்டம் இரவாகியும் தற்போதும் இடம்பெற்று வருகிறது.
பெருந்திரளான இளைஞர்களும், மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றவண்ணம் உள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான சுலோகங்களுடன் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
போராட்டத்தின் இடையே நோன்பு துறத்தலும் இடம்பெற்றது.
எந்தவொரு வன்முறையுமின்றி, அரசுக்கெதிரான போராட்டம் இன, மத, வயது வேறுபாடின்றி இடம்பெற்று வரும் நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment