721187541parliamnet5
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகர் பதவிக்கும் போட்டி??

Share

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்முனை போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த 22 ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது முதல் தேர்வாக, பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும்.

ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். இருவர் போட்டியிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன்படி ஆளுங்கட்சியின் சார்பில் டிலான் பெரேராவும், 11 கட்சிகளின் சார்பில் அநுர பிரியதர்சன யாப்பாவும் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடக்கூடும். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் உறுப்பினர் ஒருவரை நிறுத்தக்கூடும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...