WhatsApp Image 2021 09 12 at 09.28.19 1
இலங்கைசெய்திகள்

வண்ணமயமாகியது களனி பாலம் !!

Share

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன.

நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது,

நாட்டில் முதன்முதலில் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தின் இரு பகுதிகளையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் ;மற்றும் புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கங்கள் ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

k k1 k2 k3k4 k6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...