வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

மிஹிந்தலை நகரை மையமாகக் கொண்டு பொருள் ஏற்றுமதி வலயத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகை உட்பட ஏனைய பொருட்களை சேகரித்து தொடருந்து மார்க்கமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ரயில் மார்க்கமாக மிஹிந்தலைக்கு கொண்டு சென்று குறித்த மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அனுராதபுரம், மிஹிந்தலை தொடருந்து மார்க்கத்தை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...