sajith
இலங்கைஅரசியல்செய்திகள்

கூட்டணி அரசியல் பயணத்திற்கு சாத்தியமில்லை!

Share

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணி அரசியல் பயணம் இனியும் சாத்தியப்படாது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரியப்படுத்தியுள்ளது.

வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்த போதிலும் அக்கட்சியின் ஏனைய எம்.பிக்கள் நால்வரும் ஆதரித்தே வாக்களித்தனர். அதேபோல ரிஷாட் பதியுதீன் பட்ஜட்டை எதிர்த்திருந்தாலும் அவரது கட்சியை சார்ந்த மூன்று எம்.பிக்கள் ஆதரித்து வாக்களித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கூட்டணியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில்...

11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும்...

10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....