சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட குழு இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
சீன கப்பல் விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீனாவின் நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டியூ குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும், அணிசேரா நாடு என்ற வகையில் இலங்கை செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment