இலங்கையில் சீனக் கப்பல்! – தமிழக எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கை வந்துள்ள சீனாவின் சர்ச்சைக்குரிய உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நன்குறமிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழக கரையோர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 விமானங்களும் நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் உள்ளிட்ட 8 கப்பல்கள் இடைவிடாத கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

VideoCapture 20220817 100630

#SriLankaNews

Exit mobile version