senthil thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்

இ.தொ.காவின் தலைவராகின்றார் செந்தில் தொண்டமான்!

Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும், செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நாளை (30) கூடவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனைப் போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடுவதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது பதவிகளுக்கான உறுப்பினர் தேர்வு சம்பந்தமான பட்டியலில் இறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...