Sankanai 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீட்டை ஏற்க முடியாது: கொதித்துப்போன வியாபாரிகள்

Share

சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாகப் பாதிப்படைந்ததுள்ளது.

திடீர் வரியேற்றம் மற்றும் பிரதேச சபையினர் உள்ளக சுற்றுப்புறத்தைக் கண்காணிக்காமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sankanai 04

இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள்,

எமது சந்தையிலிருந்து கொரோனா நிலைமையின் காரணமாக வெற்றிலை மற்றும் பழக்கடை என்பவற்றினை பழைய மீன் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

தற்போதைய நிலைமையில் பிரதேச சபையினர் எமது இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக பிரதேச சபையின் அனுமதியுடன் குத்தகையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

Sankanai 05

எங்களுக்கு இந்த இடத்தினை மாற்றம் செய்து புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று சுகாதாரப் பகுதியினர் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு ஏற்ற வகையில் எங்களை புதிய இடங்களுக்கு அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Sankanai 02

மேலும், பிரதேச சபையினர் தற்போது உள்ள இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீடு செய்கின்றனர்.

இதனால் தற்போது பாதுகாப்பற்ற தரமற்ற கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தில்தான் எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்றும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Mathakal Protest 02

நுளம்பு, வெயில் ஆகியவற்றால் மிகவும் கடும் அவதிப்படுகிறோம். குறித்த பிரதேசம் துர்நாற்றம் வீசுகின்றமையால் மக்கள் குறித்த இடங்களுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மந்த நிலை காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...