Budha
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அம்பாறையில் குடியேறிய புத்தர் இன்று மாயமானார்!

Share

தமிழர்கள் வாழும் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளது.

அம்பாறை – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று வைக்கப்பட்ட புத்தர் சிலையானது இன்று அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தர் சிலை நிறுவியமைக்கு அப்பகுதிவாசிகள் கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

Buddha 01

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையைத் தொடர்ந்து, பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அவ்விடத்திற்குப் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளரினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

Buddha 02

இவ்வாறு கடும் எதிர்ப்புகளை ஆர்ப்பரித்தமையைத் தொடர்ந்து, சங்கமன்கண்டிப் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீ பாத கேபிள் கார் திட்டம்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என சிஇஏ விளக்கம்

ஸ்ரீ பாத (ஆதாம் சிகரம்) மலைத் தளத்தில் கேபிள் கார் திட்டத்தை அமைப்பதற்கு இதுவரை எந்தவிதமான...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் ஜூன் 30 முதல் தண்ணீர்க் கட்டணத் திருத்தம்: அமைச்சர் சுசில் ரணசிங்க தகவல்

இலங்கையில் தண்ணீர்க் கட்டணங்களின் அடுத்தக்கட்ட திருத்தம் வரும் ஜூன் மாதம் 30-ம் திகதி மேற்கொள்ளப்படும் என...

world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...