செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

Tractor
Share

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் காணப்படும் காணி உழவு இயந்திரத்தால் பண்படுத்தபட்டுள்ளது. அதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி காணி உரிமையாளரின் மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தியுள்ளார்.

Tractor

இந்தநிலையில், சிறுவர்களில் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளான்.

சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னாடியே உயிரிழந்து விட்டான் என
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...