WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷமிகளால் படகுகளுக்கு தீ வைப்பு

Share

நாகர்கோயில் பகுதியில் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் படகுகள் ஆரம்பத்தில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குறித்த படகுகள் தொழிலில் ஈடுபடாத காரணத்தினால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்ரணி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான பத்து படகுகளே இவ்வாறு விஷமிகளால் தீமூட்டி சொத்து அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM 2 WhatsApp Image 2023 03 22 at 1.54.23 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...