image b326d26cd1
இலங்கைசெய்திகள்

கறுப்புச் சந்தையில் காப்புறுதி நிறுவனங்கள்

Share

நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான வினா நேரத்தில்  காமினி வலேபொட எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு  நிதி இராஜாங்க அமைச்சர்   தெரிவித்தார்.

காமினி வலேபொட எம்பி தமது கேள்வியின் போது, நாட்டில் பல தனியார் காப்புறுதி நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனங்கள் கறுப்புச் சந்தை வர்த்தகத்தில்  ஈடுபட்டு பாரிய வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதற்கான வருமான வரி முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், சேவையில் ஈடுபடுத்தாமல் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கும் கூட எந்த சலுகையுமின்றி ஈவிரக்கமற்ற விதத்தில் முழுமையான  தவணைக் கொடுப்பனவுகளை அறவிட்டு வந்துள்ளன.

இதனால் வாகன உரிமையாளர்கள் விவசாயிகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.அத்துடன் அத்தகைய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு முறையாக வருமான வரியை செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளித்த போதே, நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும்.

அத்தகைய தனியார் காப்புறுதி நிறுவனங்கள் உரிய முறையில் வருமான வரியை செலுத்துகின்றனவா என்பது தொடர்பில் ஆராய விசேட கவனம் செலுத்தப்படுவதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படும்  என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...