image b326d26cd1
இலங்கைசெய்திகள்

கறுப்புச் சந்தையில் காப்புறுதி நிறுவனங்கள்

Share

நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான வினா நேரத்தில்  காமினி வலேபொட எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு  நிதி இராஜாங்க அமைச்சர்   தெரிவித்தார்.

காமினி வலேபொட எம்பி தமது கேள்வியின் போது, நாட்டில் பல தனியார் காப்புறுதி நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனங்கள் கறுப்புச் சந்தை வர்த்தகத்தில்  ஈடுபட்டு பாரிய வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதற்கான வருமான வரி முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், சேவையில் ஈடுபடுத்தாமல் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கும் கூட எந்த சலுகையுமின்றி ஈவிரக்கமற்ற விதத்தில் முழுமையான  தவணைக் கொடுப்பனவுகளை அறவிட்டு வந்துள்ளன.

இதனால் வாகன உரிமையாளர்கள் விவசாயிகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.அத்துடன் அத்தகைய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு முறையாக வருமான வரியை செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதிலளித்த போதே, நாட்டில் செயற்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் கறுப்புச் சந்தை மூலம் பாரிய வருமானத்தை பெற்று வருகின்றமை மற்றும் உரிய முறையில் வருமான வரியை செலுத்தாமை  தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தும்.

அத்தகைய தனியார் காப்புறுதி நிறுவனங்கள் உரிய முறையில் வருமான வரியை செலுத்துகின்றனவா என்பது தொடர்பில் ஆராய விசேட கவனம் செலுத்தப்படுவதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அந்த விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படும்  என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...