‘பிம்ஸ்டெக்’ மாநாடு – இறுதிநாள் இன்று

‘பிம்ஸ்டெக் மாநாடு

இலங்கையில் நடைபெறும் ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின் இறுதிநாள் அமர்வு இன்று (30) இன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அரச தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே அரச தலைவர்கள் பங்கேற்பார்கள். அரச தலைவர்களின் உரையைதொடர்ந்து பிம்ஸ்டெக் அமைப்பின் பிரகடனம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இவ்வமைப்பின் மாநாடு 28 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சுகளின் செயலாளர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நேற்று வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்றது. இன்று 7 நாடுகளினதும் அரச தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும்.

#SriLankaNews

Exit mobile version