“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி இந்த அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நிகழும் மரணங்கள் தொடர்பில் எம்மால் தீர்க்கமாகக் கூற முடியாது என்றாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகின்றத.அத்துடன்,நிஷாந்த போன்ற திறைசேரி அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்லர். எனவே, இந்த விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும்,
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசின் தீர்மானம் முறையற்றது. மக்கள் இறுதியாக நம்பிச் செல்லும் ஒரே இடம் நீதிமன்றம் தான். அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசுகள் வரும், போகும் ஆனால் நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன், அரசியல் காரணங்களுக்காக நீதித்துறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம். இது ஒரு அரசியல் கூட்டணி மட்டுமல்ல, நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் பொதுவான மேடை.
இப்பொழுது ஆறு கட்சிகள் இணைந்துள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் இதில் இணையும். அரசைக் கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை.
எதிர்க்கட்சிகள் நாட்டைச் சீர்குலைக்கப் பார்க்கின்றன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைக்கும் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். பிரதமர் பொய்களைக் கூறக்கூடாது.
அன்று நாட்டைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்தது நீங்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்குத் எனது முழுமையான ஆதரவை வழங்குகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

