சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தின் காரணமாக தொடருந்தின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று, கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த 1164 இலக்க தொடருந்து, தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்ட போது மாலை 04.35 அளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

