கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்
இலங்கைசெய்திகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

Share

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள் இருவரும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.யு.ரங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதிய சத்திரசிகிச்சை அறை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல் உருவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...