கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்
இலங்கைசெய்திகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

Share

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள் இருவரும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.யு.ரங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதிய சத்திரசிகிச்சை அறை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல் உருவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...