WhatsApp Image 2022 05 03 at 2.09.51 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலின் சொத்துக்கள் வேறொரு பெயரில் பதுக்கல்! – தகவலை வெளியிட்டார் அநுர

Share

” பஸில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திரு நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில்கூட பாரிய ஊழல்கள் உள்ளன.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

” நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின்கீழ் ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ எனும் அமைப்பால் கொழும்பு மன்றத்தில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல், மோசடிகள் குறித்த தகவல்களை அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தினார். பெருமளவான ஆவணங்களும் ஊடக சந்திப்பின்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

” எயா பஸ்களை வாங்குவாறு, பிரான்ஸின் எயா பஸ் நிறுவனம் அழுத்தம் பிரயோகித்துள்ளது. இது குறித்து சர்வதேச விசாரணை இடம்பெற்றது. இது தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த எயா பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் கூட்டம் நடந்துள்ளது. சமல் ராஜபக்சவின் மகனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார். எயா லங்கா நிறுவனத்தில் அவர் பதவி வகித்துள்ளார். ” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

” 2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.” – என்ற தகவலையும் வெளியிட்டார்.

யோசித ராஜபக்சவின் காணிகள் குறித்த தகவல்களும் அம்பலப்படுத்தப்பட்டன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....