tamilni 616 scaled
இலங்கைசெய்திகள்

வெறிச்சோடிக் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்

Share

வெறிச்சோடிக் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்படவிருந்த மூன்று ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த MH 178 விமானமும், காலை 7.25 மணிக்கு இந்தியாவின் ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் UL 177 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காலை 8.55 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்ல வேண்டிய UL 181 என்ற விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிக்கல் நிலை காரணமாக நேற்று 7 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் தொடர் விமான தாமதம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த காலதாமதத்தால், தாய்லாந்தில் புனித யாத்திரை சென்ற மக்கள் குழுவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்னும் சில நாட்கள் ஆகும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...