jaffna 720x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கு தடை உத்தரவு!

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த விண்ணப்பத்துக்கு, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதன்படி. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற தடையுத்தரவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை, தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்தில் கொண்டு, நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில், பொதுமக்களை ஒன்றுகூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ நடாத்துவதற்கு 15ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...