24 669a4f29d723c
இலங்கைசெய்திகள்

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்த ஜோதிட நிபுணர்

Share

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்த ஜோதிட நிபுணர்

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டு ஜோதிடக்கலை நிபுணரான ஏதோஸ், மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் குறித்து முன்பே கணித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் என பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்தவர், பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé, 36).

2024ஆம் ஆண்டு, மூன்று நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என்று கூறியிருந்தார் ஏதோஸ். மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்த நேரம்தான் இப்போது வந்துவிட்டதோ என பலரும் வியக்கத் துவங்கியுள்ளார்கள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், போர்முறைகளில் மின்காந்த துடிப்பு தொழில்நுட்பம் (Electromagnetic Pulse technology (EMP) போன்ற கண்டுபிடிப்புகள், உலகில் பல மோசமான தாக்கங்களை உருவாக்ககூடும் என்று கூறியிருந்தார் ஏதோஸ்.

தான் கணித்த மூன்று நாட்கள் இருள் என்பது, மின்காந்த துடிப்பு தொழில்நுட்பம் தொடர்பான சோதனைகள் மற்றும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் வகையில், மோதிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையில் அதிகரிக்கும் பதற்றம் முதலானவை தொடர்புடையது என கூறியிருந்தார் ஏதோஸ்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள், அமைதியாக, இந்த மின்காந்த துடிப்பு தொழில்நுட்பத்தை அதிக சேதம் ஏற்படாதவகையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...