24 669a5369358f6
உலகம்செய்திகள்

முதல் கணவருடன் விவாகரத்து வாங்காமல்., 2 -வது திருமணம் செய்த இளம்பெண் கைது

Share

முதல் கணவருடன் விவாகரத்து வாங்காமல்., 2 -வது திருமணம் செய்த இளம்பெண் கைது

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மாவட்டமான கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும், கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் செல்வக்குமார் புதுக்கோட்டையில் தனது குடும்பத்துடன் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது, கிருத்திகா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக அடிக்கடி கோவைக்கு சென்று வந்துள்ளார்.

இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2023 -ம் ஆண்டு தனது தாயை பார்க்க செல்வதாக கூறி கரூரில் இருக்கும் செல்வகுமாரின் தந்தை வீட்டிற்கு கிருத்திகா சென்றுள்ளார்.

அப்போது அவர் நகை, பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக செல்வக்குமாருக்கு, அவரது தந்தை துரைசாமி கூறியுள்ளார். இதையடுத்து, கிருத்திகாவை செல்வகுமார் தொடர்பு கொண்டபோது அவரது அழைப்பை ஏற்கவில்லை.

பின்னர், கோவைக்கு சென்று பார்த்த போதும் அவர்கள் வீடு காலி செய்துவிட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், விசாரித்தபோது செஞ்சேரிமலை பகுதியில் கிருத்திகா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அங்கு சென்று செல்வகுமார் அழைத்தபோதும் கிருத்திகா வர மறுத்துவிட்டார்.

அப்போது தான் கிருத்திகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமலேயே செல்வக்குமாருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், செல்வக்குமார் கொடுத்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கேட்டபோது தன்னை துன்புறுத்தியதாக பொலிஸில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, முதல் திருமணத்தை மறைத்து விவாகரத்து பெறாமலேயே தன்னை 2-வதாக திருமணம் செய்ததாகவும், பணம் மற்றும் நகையை கிருத்திகா எடுத்து சென்றுவிட்டார் என்றும் நீதிமன்றத்தில் செல்வகுமார் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து கிருத்திகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...