ஆயுதக் களஞ்சியம்
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை

Share

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை

தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, திஹாகொட – பண்டாரத்தவெல்ல பிரதேசத்திலேயே குறித்த ஆயுதக் களஞ்சியம் சிக்கியுள்ளது.

மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பில் மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...

Bogambara
இலங்கை

புதிதாக மாறும் பழைய சிறைச்சாலை – காரணம் என்ன?

மீண்டும் ஒரு சிறைச்சாலையாக பழைய போகம்பரை சிறைச்சாலையை ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி...

uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...