3 15 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் – வைத்தியர்கள் முரண்பாடு! அர்ச்சுனாவின் எச்சரிக்கை

Share

பொதுமக்கள் – வைத்தியர்கள் முரண்பாடு! அர்ச்சுனாவின் எச்சரிக்கை

வைத்தியர்கள் மீண்டுமொருமுறை பணிப்புறக்கணிப்பு செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (15.07.2024) வருகை தந்த வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுடன் என்னுடைய விடுமுறை முடிவடைந்ததால் நான் இன்று பணிக்குத் திரும்பியுள்ளேன். நான் வைத்தியர் ரஜீவை தொந்தரவு செய்வதற்கோ வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைத் தொந்தரவு செய்வதற்காகவோ இங்கு வரவில்லை.

வைத்தியர் ரஜீவ் என்னுடைய வேலையைச் செய்தால் எனக்குச் சந்தோசம். கொழும்பில் முக்கிய அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அந்தக் குழுவிடம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். நாளை சுகாதார அமைச்சரால் எனக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஏதும் தரப்பட்டால் அதனை முழுமையாக ஏற்கத் தயாராகவுள்ளேன்.

வைத்தியர்கள் மீண்டுமொரு முறை பணிப்புறக்கணிப்புச் செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அதனை வைத்தியர்கள் உணர வேண்டும். நாங்கள் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களால் பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதனை முறைப்பாடு செய்ய முன்வராததால் கள்வர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். அதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது” என்றார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...