images 3
இலங்கைசெய்திகள்

திருக்கோணேஸ்வரம் ஆலய மின்பிறப்பாக்கி இடத்தை வர்த்தக நிலையத்துக்கு வழங்க தொல்பொருள் திணைக்களம் வலியுறுத்தல்: பக்தர்கள் கடும் விசனம்!

Share

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் மின்பிறப்பாக்கி (Generator) வைக்கப்பட்டிருந்த இடத்தை, தனிப்பட்ட நபர் ஒருவர் வர்த்தக நிலையம் நடத்த வழங்குமாறு ஆலய நிர்வாகத்திற்குச் தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதம் ஆலய பக்தர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோணேஸ்வரம் ஆலயச் சூழலில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை அமைத்தவரின் கடையை, ஆலய நிர்வாக சபையினர் சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் அகற்றினர்.

இதைத் தொடர்ந்து, அந்த நபர் நிர்வாக சபைக்கு எதிராகக் காவல்துறையிலும், தொல்பொருள் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

காவல்துறையினரால் இந்த விவகாரம் தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், “ஆலயப் பகுதியில் வர்த்தக நிலையம் அமைக்கத் தாம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் அதனை அமைக்க நிர்வாக சபையினர் மின்பிறப்பாக்கி வைத்துள்ள பகுதியை வழங்கும்படி” நவம்பர் 7ஆம் திகதியிட்டுத் தொல்பொருள் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆலய வளாகத்தில் காண்டாமணி பொருத்த ஒரு மணிக்கோபுரம் அமைக்க நிர்வாகசபை அனுமதி கேட்டும் தொல்பொருள் திணைக்களம் அனுமதியளிக்காத நிலையில், நிர்வாக சபை மின்பிறப்பாக்கிக்கு கூரை அமைக்க விண்ணப்பித்தும் அனுமதி வழங்காத நிலையில்,

இடிந்து விழும் நிலையிலுள்ள கோணேஸ்வர வாகன தரிப்பிடத்தை செப்பனிட அனுமதி கேட்டும் அதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், ஆலய பூசகரின் தங்குமிடத்தை சிறிது விரிவுபடுத்துவதற்கு அனுமதி தரப்படாத நிலையில்,

தனிப்பட்ட நபர் கோயில் வளாகத்தில் கட்டடம் அமைக்க தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறித்து ஆலய பக்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...