Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

காலைவாரிய பங்காளிகள் – கவலையில் மொட்டு கட்சி

Share

” பங்காளிக் கட்சிகளால்தான் மொட்டு கட்சி அரசுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டது. தற்போதைய அரசு , மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம்கூட எமக்கு எழுகின்றது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிமீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். இதன் அடிப்படையிலேயே நாம் சகோதரர் கட்சிகள் என நம்பியவர்களுக்கும், மொட்டு கட்சி ஆதரவாளர்கள் வாக்களித்தனர். ராஜபக்ச என்ற நாமத்தால்தான் பங்காளிக்கட்சிகள் வென்றன.

ஆனால் குழப்பத்தை விளைவித்துவிட்டு வெளியேறிவிட்டன. தற்போதைய அரசில் சஜித் அணி உறுப்பினர்கள் உள்ளனர். சுயாதீனம் என அறிவித்தவர்களும் இருக்கின்றனர். எனவே, இது மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம் எழுகின்றது.

எனினும், நம்பிய மக்களை மொட்டு கட்சி கைவிடாது.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...