8 38
இலங்கைசெய்திகள்

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

Share

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், அநுரவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த அநுரவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனிற்கு நன்றி தெரிவித்து அநுர வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பான நல்வாழ்த்துக்களை நான் பாராட்டுகிறேன்.

எனது தலைமையிலான இலங்கையானது எமது நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...