16 12
இலங்கைசெய்திகள்

தேர்தல் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

Share

தேர்தல் குறித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை குறித்த நிறுவனங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருடன் தற்பொழுது இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படும் பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து செயல்பட உத்தேசித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அன்று முதல் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...