2 18
இலங்கைசெய்திகள்

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தின் காற்றின் தரச்சுட்டெண் 154 முதல் 160 வரையான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று(17) உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான விசாரணையின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஏனைய குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...