12 15
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

Share

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

ஏர் அஸ்தானா(Air Astana )விமான நிறுவனம் 2024/2025 குளிர்காலத்தை ஒட்டி இலங்கைக்கான (sri lanka) நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

அதன் தொடக்க விமானம் நேற்று (16)திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சேவீசஸ் ( இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வந்திறங்கிய முதல் விமானம் நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பயணிகள் மற்றும் பணியாளர்களும் வரவேற்கப்பட்டனர்.

இந்த முதல் விமானத்தில் 150 பயணிகளும் 08 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானங்கள் ஒவ்வொரு வாரமும் 04 நாட்களில் கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...